Saturday, December 31, 2011










ஆத்மா அடையும் நிலை
உலகில் தோன்றும் உயிரனைத்தும்
இறைவனடியை சேர்ந்திடுமே
அதை அறிந்து நடந்தாலே
ஆக்கம் வந்திடும் உந்தனுக்கே
பிறந்து வாழும் உயிர்களிலே
முக்தி ஜிவன்கள் சிலவாகும்.



இறந்த பின் இவர்கள் பிறப்பின்றி
பரவெளியில் கலப்பாரே
இதற்கு பெயரே விதேகமுக்தி
என்றே நீயும் அறிவாயே
இதுவே ஆன்மா உச்சநிலை
அதற்கு எச்சம் எதுவும் இல்லை




அருளொடு அறிவுசேர் உயிர்ரெலாம்
பக்தியொடு இறைவனை வணங்கிடுமே
சரியை கிரியை யோகமதில்
தளரா நின்று வாழ்ந்திடுமே
சாலோக சாமீப சாருப
பதத்திற்கு இவைகள் சென்றிடுமே

மற்றையோரின் வாழ்வை எல்லாம்
மரணம் என்றும் கவ்விடுமே
அவர்களுடைய உயிர் னைத்தும்
புநரபி மரணம் புநரபி ஜனனம் தான்
உண்மை சற்று கேளும‍யா
இதற்கு விலக்கு இல்லையே



ஓரை நொடி தன்னில் சிந்தியும்
உமக்குள் உண்மை புகுந்துவிடும்
பூதலம் தன்னில் அறநெறியை
கடைபிடித்தே நீரும் ஒழுகிடுவீர்
கவலை பறக்கும் அதனாலே
மோட்ச கதவுகள் திறந்திடுமே

Friday, December 30, 2011



சுபபோகம்

கலைஞானம் உருவான தனித்தெய்வமே
இக சுபபோகம் எனக்கில்லை உருவாக்கினாய்
அதனாலே நான் உன்னை

துயராக தினம் நாடினேன்
தெருஞானம் போவதற்கு
உய் வழி தேடினேன்

உயர் ஞானம் தந்து
நீ விளங்க வைத்தாய்
தவ ஞானம் பெறுவதற்கு


தினம் கை ஏந்தினேன்
அருள் ஞானம் தந்தே
எனை ஆண்டு கொண்டாய்


சிவ பாதம் தனைக்காட்டி
என்னை சிறக்க வைத்தாய்
சிவநேய செல்வன் ஆக


எனக்கு வழியும் தந்தாய்
சிவபோதம் தனை தந்து
நீ என்னை ஊக்குவித்தே


சிவயோக நிலைதன்னை காட்டினாயே
சிவன் நாடிச் செல்ல
வழி செய்தே விட்டாய்
சுபபோகம் சுபபோகம் சுபபோகமே.




Thursday, December 29, 2011



ஆராதிக்கிறேன்


ஆராதிக்கிறேன் நான் ஆராதிக்கிறேன்
அருள் ஒளிவீசும் தெய்வத்தை
நான் ஆராதிக்கிறேன்




ஆராதிக்கிறேன் நான் ஆராதிக்கிறேன்
ஆன்ம ஈடேற்றம் பெற்றிட
நான் ஆராதிக்கிறேன்




ஆராதிக்கிறேன் நான் ஆராதிக்கிறேன்
ஆணவம் கர்வம் அகன்றிடவே
நான் ஆராதிக்கிறேன்




ஆராதிக்கிறேன் நான் ஆராதிக்கிறேன்
முதுமையில் வாழும் செழுமைக்காக
நான் ஆராதிக்கிறேன்




ஆராதிக்கிறேன் நான் ஆராதிக்கிறேன்
வாழ்வின் எல்லைவரை நீவரவே
நான் ஆராதிக்கிறேன்




ஆராதிக்கிறேன் நான் ஆராதிக்கிறேன்
இறுதி இதயத்துடிப்பு உன்னோடு கலந்திட
நான் ஆராதிக்கிறேன்




ஆராதிக்கிறேன் நான் ஆராதிக்கிறேன்
மக்கள் வளம் பெறவே
நான் ஆராதிக்கிறேன்
















Tuesday, December 27, 2011

அமுத மொழி
அழகான அழகான அமுத மொழி
அருளான அருளான மகேந்திர குப்தாவின்
சுவையான சுவையான நூலை
அயராமல் அயராமல் படிப்பதாலே
தொலைவான தொலைவான வானம் அதில்
கெதியாக கெதியாக பறப்பதேபோல
லயமாக லயமாக மனமே செல்லும்
உயர்வான உயர்வான எண்ணமெல்லாம்
ஒளியாக ஒளியாக சுடர் விடுவதால்
தளர்வான தளர்வான கர்மா
மெதுவாக மெதுவாக எம்மை விட்டு
அறியாது அறியாது களன்றுவிடும்
சுகமான சுகமான அனுபவங்கள்
இயல்பாக இயல்பாக எம்மைநாடும்
அறியாத அறியாத இன்பம் வந்து
ஆறாத ஆறாத பரவசமாக்கும்
கனிவான கனிவான அமுத மொழி
ஒழுங்காக ஒழுங்காக படிக்கவே
இசைவாக இசைவாக சூழும் தானே.

Monday, December 26, 2011

பக்தி

க்தியினால் நித்தமும் வழிபட்டு
பொற்பாதம் தொழுதிட துணை ஆவாயே
நற்தமிழ் இசையாலே நற்சிந்தை ஓடு
நலம் கெடாது நயமுடன் பாடிடுவோம்



சத்தியம் தவறாமல் உழைத்து
புவிதனில் புனிதமாய் வாழ்ந்திடுவோமே
உத்தம வாழ்வில் உதவிட கரங்களுண்டு
உதவிகள் நாமும் செய்வோமே


வித்தகா உனையேற்றேன்
நான் விரும்பிய கவி பாடி
உன் தத்துவம் கூறிட தந்திடு வரந்தானே
எச்செயல் செய்யினும் உன் அதிகாரம் தந்து
மக்கள் புரிந்திட செய்வாயே


புண்ணியமான செய்கையினால் பூமியில்
நல்லதைச் செய்திட அருள்வாயே
நற்செயலால் வந்த ஞாலத்திலே
மோனமே நிலைத்திட வரந்தருவாயே

Sunday, December 25, 2011





பிரம்மம்

சிவ
சிவ சிவ சிவ எனப்பாடு
சிவன் தரும் வழியினை நீதேடு
உள்ளே இருப்பது ஓர் இருப்பிடம்
அதை நீ தெரிந்து கொள்ளு

சிவ சிவ
சத்தத்தின் உள்ளே சதாசிவம் கண்டார்
தலையாய ஞானம் அதை புரிந்திடுவார்
தத்துவமசி புரிந்து விட்டால்
தரணியில் அதற்கு நிகர் இல்லையே
சிவ சிவ
உத்தமா நீ அதை போற்றுகின்றாயே
கள்ளம் இன்றி பாடுவதால் உன்
கர்வம் எல்லாம் பறந்து போகும்
கவலை எல்லாம் பறந்தே போயிடுமே
சிவ சிவ
உனக்குள் இருப்பது சிவன்
என்று அறிந்து கொள்வாயே
மௌனம் வந்து சேர்ந்திடுமே
சிவ சிவ சிவ சிவ எனப்பாடு
சிவ சிவ

Saturday, December 24, 2011




அன்பான யேசுவே



என் அன்பானயேசுவே
உம்மை ஆரதிக்கிறேன்
துன்பங்கள் சூழ்கையிலே
காத்திடும் தேவரன்றோ
பாவங்கள் தோயாமல்
எம்மை பக்குவமாய்
காப்பீர் தாரணி
மக்களையே தளர்வின்றி
காப்பவரே பாரங்கள்
தூக்கியே துயருறும்
மக்களையே வாருங்கள்
உமது பாரம்
தூக்கியே செல்வேன்
என்றீர் ஒரு
கன்னத்தில் அறைந்து
விட்டால் மறு
கன்னத்தை காட்டு
என்று பக்குவ
நிலையை எமக்கு
தந்திட்ட செம்மலன்
றோ
மன்னிப்பை காட்டித்
தந்தீர்.பகை
நீக்கி மாறாத
அன்பு வையத்தில்
வையும் என்றீர்
அயலவன் தன்னை
நீரும் சகோதரனாய்
நேசியும் என்று
சொன்னீர் தட்டுங்கள்
திறக்கப்படும் என்றொரு
வார்த்தை சொல்லி
உண்மை நிலையினை
மக்கள் புரிந்திட்டு
வாழ வைத்தீர்
என் அன்பான யேசுவே
உம்மை ஆரதிக்கின்றேன்

Friday, December 23, 2011




இக்கவிதை சந்திரசேகரம்பிள்ளை ஞானாம்பிகை ஸ்தாபித ஆண்டுவிழா மலரின் வந்ததாகும்.அதனை இங்கே தருகிறோம்.

அகர வரிசை குரு துதி

அம்பிகையின் அருள் படைத்தார் எங்கள் குருநாதன்
ஆக்கம் எல்லாம் தருபவரே எங்கள் குருநாதன்


இல்லம் அதை வாழ வைத்தார் எங்கள் குருநாதன்
ஈசன் பாதம் வணங்கச் செய்தார் எங்கள் குருநாதன்

உலகத்தை உணர வைத்தார் எங்கள் குருநாதன்
ஊரினையே வாழ வைத்தார் எங்கள் குருநாதன்


எம்மில் அன்பு கொண்டவர் எங்கள் குருநாதன்
ஏற்ற தாழ்வு அற்றவர் தான் எங்கள் குருநாதன்


ஐயங்கள் தீர்த்து வைத்தார் எங்கள் குருநாதன்
ஒழுக்கம் அதை புரிய வைத்தார் எங்கள் குருநாதன்

ஓய்வில்லாத உலகம் அதில் எங்கள் குருநாதன்
ஔடதமாய் ஆனவர் தான் எங்கள் குருநாதன்

கருணை தனை காட்டி எங்கள் குருநாதன்
ங போல வளைய வைத்தார் எங்கள் குருநாதன்


சத்தியத்தை அறிய வைத்தார் எங்கள் குருநாதன்
ஞயமுடனே உரைப்பவர் தான் எங்கள் குருநாதன்

டம்ப வாழ்க்கை தவிர்க்கச்செய்தார் எங்கள் குருநாதன்
உண்மை தனை விளம்பி நின்றார் எங்கள் குருநாதன்


தரணிக்கே உழைப்பவர் தான் எங்கள் குருநாதன்
நல்லதையே செய்பவர் தான் எங்கள் குருநாதன்


பரம் பொருளை அறிந்தவர் தான் எங்கள் குருநாதன்
மயக்கத்தை களைய வைத்தார் எங்கள் குருநாதன்

யந்திரமாய் வாழ்ந்திடாமல் எங்கள் குருநாதன்
ரம்மியமாய் வாழ வைத்தார் எங்கள் குருநாதன்

லயம் உடனே வாழ்வதற்கே எங்கள் குருநாதன்
வழியினையே காட்டி தந்தார் எங்கள் குருநாதன்


பழமை தனை பேணிக்காத்தார் எங்கள் குருநாதன்
உள்ளம் அதை செப்பனிட்டார் எங்கள் குருநாதன்


றம்ப என இருந்த வாழ்வை எங்கள் குருநாதன்
அன்பு மயமாக்கி விட்டார் எங்கள் குருநாதன்




மானிடரை வாழ வைத்தல்

திருமால் இடத்தில் இல்லாமை
மாயவன் இடம் கண்டாள்
மயங்கியே தான் லக்ஷ்மியும்


மனம் மகிழ்ச்சி தரும்
வடிவழகன் மாயவன் இடம்
மோகம் தான் கொண்டாள்


கருணை கொண்ட கிருஷ்ணனும்
லக்ஷ்மி பக்தருக்கு வரம்
தரும் இயல் படைத்தார்


செல்வச் செழுமையுறு கிருஷ்ணனும்
நாராயணன் தான் என
மானிடர்க்கு புரிய வைத்தார்


கள்ளமில்லா மனதோடு கிருஷ்ணரை
அழகிய கோபியரும் அன்போடு
மதுர பாவனையில் வலம்வந்தார்


ராதையின் பிரேமை ராகத்திலும்
கோபியரின் அன்புச்செழுமையிலும்
கிருஷ்ணர் மானிடர்க்கு வாழ்வழித்தார்
.




Thursday, December 22, 2011

முருகன்

முத்தமிழ் வாசா சக்திபாலா
கைதொழ வந்தேன் ஐயா
புத்தியில் புதுமைகள் செய்திடு
புண்ணியா மனதினில் வைத்தேன்


எத்துனை துயரும் போதினிலும்
சக்தியை தந்து நீ
தரணியில் எனை காத்திடுவாய்
வித்தகா உனை விரும்பினேன்


கற்றதை கவிதையாய் நானும்
நித்தமும் இசை பாடவே
வைத்திடும் வழியினைக் காட்டிடு
அழகிய மயிலினில் வந்திடு


அன்பில் மயங்கியே யான்
அருமையாய் உனைப் பார்த்திடவே
நீ எத்தனை வரம் தந்தாய்
அத்தனையும் அடியேனை காப்பதற்கே


பொற் பாதம் வணங்கினேன்
ஏற்று அருள்வீர் ஐயா
சிந்தையே கலங்காது சிவமாகிட
வரம் தந்திடு சிவபாலா

Wednesday, December 21, 2011

சக்தி



அன்னையவள் பாதம் தொழுதே
அளப்பரிய வெற்றியினை ஈட்டிடுவோம்
எண்ணியதை எண்ணியவாறு முடிப்பதற்கு
ஏற்றமிகு சக்தியினை பெற்றிடுவோம்.



பாசமிகுவுலகை பரிந்து காக்கின்றாள்.
நேசமிகு நலனை தருகிறாள்
உள்ளத்தின் குமுறலை கூறிவிட்டால்
கள்ளமில்லா கருணையோடு வந்திடுவாள்



மூவுலகு தொழும் தேவியவள்
முந்துசிவன் நற்பெரும் மனைவியவள்
போற்றுகின்ற திருநாமம் பலவுண்டு
சால்புடனே அவளை வணங்கிடுவோம்.




Tuesday, December 20, 2011

லஷ்மி



செம்பவழ இதழழகு மங்கையவள் தங்கநிறம்
அன்புநிறை அருள்முகமும் கருணைதரு விழியழகும்
நாரயணன் நெஞ்சத்தை தங்குமிடமாய் கொண்டாள்.
நாரயணியென்று பத்தினியாம் பெயர் பூண்டாள்




பொங்கிய புன்னகை புவித்தோற்றம் காட்டிடுமே
மெல்லான நகையோடு மென்பாத சுவடெடுத்து
மேதினியில் வந்துவிட்டால் செல்வம் குவிந்திடும்
செந்தழிப்பும் மிகுந்திடும் ஐெகமும் துலங்கிடும்







பச்சை மரகதங்கள் மாணிக்க வைடூரியங்கள்
தங்கத்தால் ஆபரணம் முத்துமணி மோதிரங்கள்
தரணியெங்கும் வயல்வெளிகள் மாடமாளிகை எல்லாம்
இச்சையுடன் அருளினால் இனிதே தந்திடுவாள்.







மாடு கன்று எல்லாமே பட்டியாய் நின்றிடுமே
சந்தான விருத்தியும் தவறாது தந்திடுவாள்.
அத்தனைக்கும் பக்தியுடன் துதித்தே வணங்கிடுவோம்
அன்னையவளை துதித்தார்க்கு வறுமைதான் இல்லையே.




சரஸ்வதி



தாமரை பூவில் அமர்ந்திருப்பாள்
கருமத்தில் ஞானத்தை உவந்தளிப்பாள்.
மாணவர் தமக்கு கல்வியாய் நின்றே
வாழ்க்கையின் தேவைக்கு வழிவகுப்பாள்



சரஸ்வதி என்று புகழுவோருக்கு
தனிப்பெருந் தெய்வமாய் ஆகிநின்றாள்
பெருந்தவம் உடைய முனிவர்களும்
போற்றியே துதிசெய்வார் அன்றோ


கருணை கொண்டே மக்களிடம்
கலைகளாய் சாதனை புரிந்திடுவாள்
புலமையாய் நாமும் வரவே
மாதவம் என்ன செய்தோமோ.


பாடுமிசையில் வலம் வருவாள்
நாதங்களில் நலம் தருவாள்
போற்றியே அவளை துதிப்பார்க்கு
புத்தியாய் வாழவழி வகுப்பாள்.

Monday, December 19, 2011




இப்பாடல் கௌரி காப்பு அன்று வீட்டில் வேப்பம் இலை மணம் கமழும் போது வந்து சேர்ந்தது.



கௌரி காப்பு அம்பாளின் பாடல்



அகிலாண்ட நாயகியே
அன்பர் குறை
தீர்ப்பவளே
ஆனந்தமாக நீயும் வா வா வா



காஞ்சிபுர பட்டு உடுத்து
கைநிறைய வளை குலுங்க
ஆனந்தமாக நீயும் வா வா வா




கண்ணிறைந்த தெய்வம் நீயே
கருணை காட்டும் அன்புத்தாயே
ஆனந்தமாக நீயும் வா வா வா




திருமலை வாழ் காளிகையே
திவ்விய உருவ உத்தமியே
ஆனந்தமாக நீயும் வா வா வா




சிம்மவாகனம் உடையவளே எழில்
சின்மய சொரூபி நீயே
ஆனந்தமாக நீயும் வா வா வா




இதய தாகம் தீர்ப்பவளே
இமய மலையில் வாழ்பவளே
ஆனந்தமாக நீயும் வா வா வா




வல்லமையை தாராயோ அருள்
மான்பு மிகு சௌந்தரியே
ஆனந்தமாக நீயும் வா வா வா




இன்பமயம் இன்பமயம் எல்லாமே
இன்பமயம் இன்பத்தின் சிகரமே
ஆனந்தமாக நீயும் வா வா வா



Sunday, December 18, 2011

சிவபெருமான்

நிறைதரு கங்கை கொண்டாய்

நீறுடை நெற்றி கொண்டாய்

மனமகிழ் கொன்றை வைத்து

மான்மழு ஏந்தி நின்றாய்.


இடப வாகனமும் கொண்டாய்

உமைதனை இடபக்கம் கொண்டாய்

அன்பெனும் மலர்பாதம் கொண்டே

அடியவரை என்றும் காப்பாய்.


உலகம் யாவும் ஆகிநின்றாய்

உண்மைதனை விளம்பி நின்றாய்

உயிரெல்லாம் புகுந்து நின்றாய்

பொறியெல்லாம் புகழவே வேண்டும்.



குரு தரிசனம்

குரு தரிசனமே வாழ்க்கைக்கு நலமே

குரு தரிசனமே வாழ்க்கை்கு நலமே


கள்ளம் இல்லாமலே நல்லதை கற்பதற்கும்

கனிவுடன் மக்கள் துயரினைக் களைவதற்கும்

அல்லல் நிறைந்த மாய உலகிலே

இனிய நல்லோர் சேர்க்கை சேர்வதற்கும்

(குரு தரிசனமே)

பாரினில் நாமே சீலமாய் வாழவும்

ஒழுக்க நெறி ஞானம் சேர்ந்திடவும்

மேலோர் கீழோர் என்பது இன்றி

தம் தவத்தினால் தாம் உயர்நதிடவே

(குரு தரிசனமே)


திண்ணிய வினைகள் தீர்ந்திடும் அதனால்

செல்லும் வாழ்க்கை பாதை தெளிவுறுமே

புண்ணிய பாவங்கள் என்றே நாம்

பகுத்து பார்த்திட வழி பிறந்திடுமே

(குரு தரிசனமே)

மனதிடையே ஒளி பிறந்து வரும்

சோர்வில்லாத நிலை தான் தோன்றிடுமே

அகத்தின் வாயிலால் கிடைத்த நிலையால்

சரீரம் என்றும் புத்துணர்வு எய்திடுமே




Saturday, December 17, 2011

Seeking God
Andaman and you will atiyum
You will torch you tolmaraiyum
Between blue water between
Air-gap between the fire
Van itaitonrum element
You are the leader tarmanilai
All which erriye panikinren
i give thewin to stand carriye
இறை வேண்டுதல்




ஆதியும் அந்தமும் நீ




ஜோதியும் நீ தொல்மறையும் நீ




நீலம் இடை நீர் இடை




தீ இடை வளி இடை




வான் இடைதோன்றும் பூத




தலைவன் நீ தர்மநிலை நீ




ஏற்றியே போற்றி உனை பணிகின்றேன்




சாற்றியே நிற்கும் கவிதைக்கு வெற்றியை தா




ஓம்


சுவாமிஜி துணை


காப்பு


ஆனைமுகத்தோனை அம்பிகைதன்பாலகனே


ஞானம் கொடுப்போனே-தரணியில்


என் பாட்டுக்கு காப்பாய் நின்றிடவே


திருவடி பணிந்து வேண்டுகின்றேன்.













Friday, December 16, 2011






மர்ப்பணம்

என் கவிதை என்று

சொல்லி இன்புறவே வேண்டாம்

பொன் கவிதை எழுதத்

தந்த தமிழ் அன்னை

அவளின் சொந்தமான இக்கவியை

பாதமலர் தான் பணிந்து

என்பதிக்கு சேர்க்கின்றேன் யான்.


Thursday, December 15, 2011

எனதுரை

(அம்மாவின் உரை)


முதலில் என் உள்ளத்தில் உறுதுணையாய் நின்று அருள்பாலித்து வரும் எங்கள் குரு சுவாமி கெங்காதரணாந்தவின் மலர்பாதங்களை பணிந்து என் நன்றியினைதெரிவிப்பதோடு இந்த நூலுக்கு தமது ஆசியுரை வழங்கிய ராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி ஆத்மகணாந்தா ஜி அவர்கட்கும் என் மனம் நிறைந்த நன்றியினை பணிவோடு தெரிவித்து கொளகிறேன். திருமலையில் எமக்கு எப்போதும் நல் உபதேசங்களை உவந்து கூறும் தொண்டர் காந்தி ஐயா வென அழைக்கும் கந்தையா ஆசிரியர் என்ற காந்தியியாவுக்கு எனது நூலுக்கு வாழ்த்துரை தந்த்மைக்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். இந்த நூலுக்கு ஆசிரியை கலாபூஷணம் பாலேஸ்வரி நல்ரெட்ணசிங்கம் அவர்கள் முகவுரை தந்து கவிதை உலகிற்கு என்னை அறிமுக படுத்தியமைக்கு அன்பின் நன்றியைக் தெரிவித்து கொள்கிறேன்.அடுத்ததாய் வெளியீட்டாளர் என்று கூறப்படினும் சிறுவயதில் இருந்து தாய் பிள்ளை போல் பழகிய என் அண்ணன் ராமச்சந்திரனின் நண்பர் சித்திஅமரசிங்கம் அவர்கட்கும் என் அன்பு கலந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். இவர்கள் நூலுக்கு வாழ்த்துரை ஆசியுரை முகவுரை வழங்கி என் மனதில் இடம் பிடித்து அன்பின் நன்றியை பெற்றவர்கள் எனது நூலை நூலாக கணினியில்


அச்சுகோத்து தந்தவர்களான விஜயா,யமுனா மேலும் இரு குழந்தைகள் இவர்களுக்கும் எனது நன்றியினை தெரிவிக்கிறேன். திரு ஆனந்தராஜா என்பவர் எனக்கு உறவினராய் மட்டுமல்லாது என் சகோதரராய் நின்று இந்நூல் அச்சில் வர பெரிதும் உதவினர் அவருக்கும் என் நன்றியினை தெரிவிக்கிறேன் மேலும் இந்நூல் வெளியிட்ட அச்சகத்தார்உதவி செய்தோர் அனைவருக்கும் என்நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.



நூல் ஆசிரியை



திருமதி.ஞா.ஸ்ரீஸ்கந்தராஜா

ஆசியுரை



நூலாசிரியர் திருமதி.ஞானமனோகரி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களைப் பல ஆண்களாக நான் நன்கு அறிவேன்.அவரைக் காணும்போதெல்லாம் ஆத்மீக விடியங்களைப் பற்றியே பேசுவார். ஆத்மீக சம்பந்தமான இந்த நூலை அவர் எழுதத்தகுதி உடையவர்.



கடவுளை அறிந்து கடவுளை வழபட்டு கடவுளை அடைதலே மனிதப் பிறவியின் நோக்கம் என்ற யாழ்ப்பாணத்து ஆறுமுகநாவலர் பெருமான் அருளியுள்ளார். இந்த நோக்கத்தை அடைய உதவும் நூல்களே முதன்மையான நூல்களாகும்.



இந்த நூல் ஆத்மீகவழிக்கு பெரிதும் உதவியாக உள்ளது.கடவுளுடைய சக்தி மேலானது என்றும் கடவுளை அடைவதற்கு எங்களை எவ்வாறு தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஆங்காங்கு எழுதப்பட்டுள்ளது.



நூலிலே நூற்றெட்டுப் பாடல்கள் உள்ளன. நூல் முழுவதையும் நான் படித்தேன். பேராசையினாலும் சுயநலத்தினாலும் சமூகம் கீழ்நிலை அடைந்திருப்பதை ஆசிரியர் நன்கறிந்து சமூகத்தை நலவழிப்படுத்த முயன்றுள்ளார்.



இளைஞர்கள் வழிதப்பிப்போய்க் கொண்டிருக்கிறார்கள் பெறறோரும் ஆசிரியர்களும் பெரியவர்களும் இளைஞர்களுக்குப் புத்திகூறுவதோடு முன்மாதிரியாக வாழ்ந்துகாட்ட வேண்டும். சமய நூல்களையும் படிக்க வைக்க வேண்டும்.



நூலாசிரியர் தனது சொந்த அனுபவங்களைக் குறிப்பிட்டு தான் எவ்விதம் கடவுள் பக்தியால் கடவுள் நமபிக்கையால் முன்னேறினேன் என்றும் எழுதியிருக்கிறார். எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே என்று தாயுமா சுவாமிகள் அருளினார்.எல்லோறும் இன்பற்றிருக்கவே நூலாசிரியர் இதனை எழுதினார்.



இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க



ஆனந்தம்



திருகோணமலை பொ.கந்தையா



09- 01-2006 காந்திஆசிரியர்

வாழ்த்துச்செய்தி


ஆன்மீக ததும்பும் ஆத்ம துளிகள் என்ற இக்கவிதைத் தொகுப்பை யாத்து எமக்களித்திருப்பவர் திருகோணமலை பழங்குடிச் சைவப் பரம்பரையில் வந்துதித்த திருமதி ஞானமனோகரி ஸ்ரீஸ்கந்தராஜாவார். இவர் இம்மண்ணில் சைவமும் தமிழும் தழைத்தோங்க சேவை செய்த ஒரு பக்திப் பரம்பரையைச் சேர்ந்த திரு.சந்திரசேகரப்பிள்ளை ஞானாம்பிகை தம்பதிகளின் புதல்வியாவார்.


இவரது உடன்பிறப்புக்களும் இன்று இம்மண்ணிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் பல சமய இலக்கியப் பணிகளை செய்து வருகின்றனர் என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது. இறைவனடி சேர்ந்த இவரது துணைவரும் தமிழுக்கும் சைவத்துக்கும் தொண்டாற்றி ஒரு காலத்தில் திருகோணமலைப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திரு.சிவபாலன் அவர்களின் புதல்வனாவார்.


இக்கவிதைத் தொகுதியில் ஆசிரியரின் சுயவரலாற்றைப் படிக்கும் போது தன்னடக்கமாக இவர் பல உள்ளார்த்தமான கருத்துக்களை ஒழுவு மறைவின்றி எம்முடன் பகிர்ந்து கொள்வது இவரது கள்ளம் கபடமற்ற உள்ளப் பண்பைக் கூறுகிறது.


இக் கவிதைகள் நூல் உருவில் வர தன் புதல்வன் தான் காரணம் எனறும் கவிதைகள் எழுதுவது என் பொழுது போக்கு ஆனால் அவை மேடைக்கு வந்ததில்லை. முளைத்து வரும் வேளையிலேயே கருகிச் சருகாகிவிடும் அதைப் படிப்பாரும் இல்லை.எனக்கு உற்சாகம் தருவாரும் இல்லை. என்று வெளிப்படையாகவே இவர்கூருவதைப் படிக்கும் போது இவரது உள்ளத்தின் ஆதங்கம் எமக்கு நன்றாகப் புரிகிறது. அத்துடன் இப்படி எத்தனை எழுத்தாளர்கள். கவிஞர்கள் தமது ஆக்கங்களை வெளிகொணர முடியாத நிலையில் அப்படியே மறைந்து போய் விடுகிறார்கள் என்பதையும் எமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.


அடுத்து சமர்ப்பணம் என்ற தலைப்புப் பற்றியது.ஓரு எழுத்தாளன் ஒரு நூலை வெளியிடும் போது எத்தனை விடயங்களைப் பற்றிச் சிந்தித்து தலையுடைக்க வேண்டியுள்ளது என்பது ஆசிரியை வாயிலாக நிதர்சனமாகக் காட்டப்படுகிறது.


இது எவ்வளவு பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது என்பதை அவர் வாயிலாகவே கேட்போம். இதை யாருக்குச் சமர்ப்பணம் செய்வது குரு,தாய்,தந்தை,பதி எனசிந்தித்து ஈற்றில் எனது பதிக்கே இதைச் சமர்ப்பிக்கிறார்.


இந்த கவிதை யாருக்குச் சமர்ப்பணம் என்றுயோசித்தேன். நால்வர் என் முன் வந்தனர். என் குருநாதர், என் தாய் தந்தை என் கணவர் சரி யோசிப்போம் என்று விட்டுவிட்டேன். ஒரு நாள் தியானத்தில் இருந்து எழும்போது யாருக்கு இக்கவிதை வந்தது. இது யாருக்கு சமர்ப்பிக்கப்பட்டது. என்று கவிதையைப் படித்துப் பாருங்கள், எனக் குறிப்பிடுகிறார்.


இக்கவிதைத் தொகுதி வெளியிடவதில் தன் மகனும் மகளும் பெரும் பங்காற்றனர் என்பதைக் படிக்கும் போது "ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோனெனக் கேட்ட தாய்" என்ற குறள் மனதில் ஒலிக்கிறது.


சுவாமி கெங்காதரானந்தா மீது இவர் எவ்வளவு மதிப்பும் மரியாதையும் பக்தியும்கொண்டவர் என்பதை இவரது கவிதைகள் பறைசாற்றும்.


திருகோணமலை மண்ணிற் பிறந்ததால் இங்குள்ள பல திருத்தலங்கள் மீதும் இவர் கவிதை இயற்றியுள்ளார்.குறிப்பாக திருக்கோணேசர் ஆலயம். ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம் விலலூன்றிக்கந்தர் போன்றவற்றைக் கூறலாம்.


மனநிம்மதிக்கும் மனசாந்திக்கும் கைகொடுக்கக் கூடிய இக்கவிதைத் தொகுப்பு நிச்சயம் எம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும்.ஒரு ஆன்மீனவாதியின் அற்புதமான கவிதைகளை இழந்து விடாமல் அதற்கு உரம் போட்டு விருட்சமாக்கிய இவரது பிள்ளைகளையும் நாம் போற்ற வேண்டும். ஆன்மீக என்றால் என்ன என்று கேட்கும் இக்காலப் பரம்பரையினர் வாழ்ந்து கொண்டிருக்கும் இக்காலப்பரம்பரையினரிடம் இவரது வழித்தோன்றல்கள் இந்த அரும்பணிக்கு உதவியமை போற்றப்பட வேண்டும்.


நூறு கவிதைகளைக் கொண்ட இத்தொகுதி படிப்பதற்கு மனச்சாந்தியைத் தரவல்லதுஎனக் கூறி ஆசிரியை இன்னும் பல கவிதைகளை எழுதி வெளியிடவேண்டும் என வாழ்த்தி இக்காலகட்டத்தில் இத்தொகுதி மிகவும் பொருத்தமானது எனபதையும் வெளிப்படுத்தி அமைக்கிறேன்.



வாழ்க இவரது பணி


கலாபூஷணம்
பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கம்





வாழ்த்துச் செய்தி
ஆதி காலந்தொட்டே மனிதன் தனது சிந்தனைகளையும் ,உணர்வுகளையும் வெளிப்படுத்தப் பல வழிமுறைகளைக் கையாண்டு வந்துள்ளான்.அவற்றுள் ஒன்றே கவிதையாத்தல் என்பதாம்.
இநநூல்அமைந்துள்ள 108பாடல்களும் திருமதி ‌‍‌ஞானமனோகரி ஸ்ரீஸ்கந்தராஜா அமையாரின்இறைபக்தி,அன்பு, போன்ற ஆத்மிய உணர்வுகளை பிரதிபலிப்பனவாய் அமைந்துள்ளன.அவர் திருக்கோணமலை முனிவர் தவத்திரு கெங்காதரானந்த சுவாமிகளின் மீது மிகுந்த பக்தி கொண்டவர். எனவே அவரது அருளுக்குப் பாத்திரமானவர். அந்த குருவருளின் காரணத்தினால் இப்பாடல்கள் அவரது உள்ளத்திலிருந்து அநாயசமாக வெளிப்படகின்றன! அம்மையாருக்கு எங்கள் நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக!

சுவாமி ஆத்மகனானந்தா

Tuesday, December 13, 2011

ஆத்ம துளிகள்



இது அம்மா வின் முதல் புத்தகம்



ஆத்ம துளிகள்



ுவாமி ஆத்மகனானந்தா அளித்த வாழ்த்துச் செய்தி