
சுபபோகம்
கலைஞானம் உருவான தனித்தெய்வமே
இக சுபபோகம் எனக்கில்லை உருவாக்கினாய்
அதனாலே நான் உன்னை
துயராக தினம் நாடினேன்
தெருஞானம் போவதற்கு
உய் வழி தேடினேன்
உயர் ஞானம் தந்து
நீ விளங்க வைத்தாய்
தவ ஞானம் பெறுவதற்கு
தினம் கை ஏந்தினேன்
அருள் ஞானம் தந்தே
எனை ஆண்டு கொண்டாய்
சிவ பாதம் தனைக்காட்டி
என்னை சிறக்க வைத்தாய்
சிவநேய செல்வன் ஆக
எனக்கு வழியும் தந்தாய்
சிவபோதம் தனை தந்து
நீ என்னை ஊக்குவித்தே
சிவயோக நிலைதன்னை காட்டினாயே
சிவன் நாடிச் செல்ல
வழி செய்தே விட்டாய்
சுபபோகம் சுபபோகம் சுபபோகமே.
No comments:
Post a Comment