Thursday, December 22, 2011

முருகன்

முத்தமிழ் வாசா சக்திபாலா
கைதொழ வந்தேன் ஐயா
புத்தியில் புதுமைகள் செய்திடு
புண்ணியா மனதினில் வைத்தேன்


எத்துனை துயரும் போதினிலும்
சக்தியை தந்து நீ
தரணியில் எனை காத்திடுவாய்
வித்தகா உனை விரும்பினேன்


கற்றதை கவிதையாய் நானும்
நித்தமும் இசை பாடவே
வைத்திடும் வழியினைக் காட்டிடு
அழகிய மயிலினில் வந்திடு


அன்பில் மயங்கியே யான்
அருமையாய் உனைப் பார்த்திடவே
நீ எத்தனை வரம் தந்தாய்
அத்தனையும் அடியேனை காப்பதற்கே


பொற் பாதம் வணங்கினேன்
ஏற்று அருள்வீர் ஐயா
சிந்தையே கலங்காது சிவமாகிட
வரம் தந்திடு சிவபாலா

No comments:

Post a Comment