பிரம்மம்
சிவ சிவ சிவ சிவ எனப்பாடு
சிவன் தரும் வழியினை நீதேடு
உள்ளே இருப்பது ஓர் இருப்பிடம்
அதை நீ தெரிந்து கொள்ளு
சத்தத்தின் உள்ளே சதாசிவம் கண்டார்
தலையாய ஞானம் அதை புரிந்திடுவார்
தத்துவமசி புரிந்து விட்டால்
தரணியில் அதற்கு நிகர் இல்லையே
சிவ சிவ
உத்தமா நீ அதை போற்றுகின்றாயே
கள்ளம் இன்றி பாடுவதால் உன்
கர்வம் எல்லாம் பறந்து போகும்
கவலை எல்லாம் பறந்தே போயிடுமே
சிவ சிவ
உனக்குள் இருப்பது சிவன்
என்று அறிந்து கொள்வாயே
மௌனம் வந்து சேர்ந்திடுமே
சிவ சிவ சிவ சிவ எனப்பாடு
சிவ சிவ

No comments:
Post a Comment