Thursday, January 19, 2012

வரப்புயர

வரப்புயர என்று
ஔவை வாழ்த்திய
வாழ்த்து ஒலிபோல்
நல்லெண்ணம் உயரவேண்டும்.
எண்ணத்தில் நலமிருந்தால்
சித்தத்தில் சுகம்தான்.
சித்தமதில் சுகமிருந்தால்
சிவனடியை நினைத்திடுவோம்.
சிவனையே நினைத்துவிட்டால்
மனமது அடங்கிவிடும்.
மனமது அடங்கிவிட்டால்
நுண்ணிய செயல்கள்
புரிந்துவிடும் அதனாலே
வித்தைகள் விளங்கினால்
ஆசைகளும் அகன்றுவிடும்.
ஆசைகளை அகற்றிவிட்டால்
அகிலமே சுகமடையும்.

No comments:

Post a Comment