Tuesday, January 17, 2012






(வாசலில் உட்கார்ந்து குளிர் காற்றை சுவாசிக்கையில் ஏற்பட்ட உணர்வு)

இமயமலையில் குடியேறினால்


இமயமலை சாரலில் குடியிருப்போமே.
இனியகாற்றை சுவாசித்தே வாழ்ந்திடுவோமே.
மலைமகளே உன்னாலே மகிழ்ந்திடுவோமே.
பரிசுத்த வாழ்க்கையினைச் சுகித்திடுவோமே.



பனியுருகுவதை பார்த்து நிற்போமே.
ஓவியமாய் மனதினிலே வைத்திடுவோமே.
கதிரவனை பார்த்து சிலித்திடுவோமே.
காண்பரிய காட்சியெல்லாம் தோண்றிடுமே.

அத்தனையும் உண்மையடா விளங்கிடுவாயே
இமயம்தான் போய் வாழமுடியுமா?
உண்பதற்கு உணவுதான் கிடைத்திடுமா
உருகின்ற பனியைதான் குடிக்கலாகுமோ?

படுப்பதுதான் பனிகட்டியில் படுக்கலாகுமா
எல்லாமே உணர்வலைகள் உணர்ந்திடுவாயே
இமயத்தில் இருப்பதாய் நினைத்திடுவாயே
இதுவுமே ஓர் இறையின்பம் ஆக்கிடுவாயே.

No comments:

Post a Comment