Saturday, January 28, 2012

ராஜ யோகம்

பிரமம் முகூர்த்தம் அதில் எழந்திடுவார்
அவர் தம் காலைக் கடன்களை
சடுதியில் செய்தே முடித்து இடுவார்
தோய்த்து உலர்ந்த காவி வஸ்திரம்
தன்னை புனைந்தே ஆசனத்தில் இருந்து
கையிலே ருத்திராட்சம் மாலை ஏந்தி
ஓங்கார சொரூபி பிரணவனை துதித்து
குரு உபதேச மந்திரமதனை செப்பியே
ஒருமித்த மனத்தோடு இருந்திடுவார்
தியானம் அது நிலைத்திடும் பொழுதினிலே
ஆதாரசக்தி வழி குண்டலனி கிளம்பி
ஏழாம் இடமாம் சகஸ்திரம் அதனை
அடையும் முன் அற்புதக் காட்சிகள்
பலவற்றை தாண்டியே யோகி தானும்
தத்துவமசி என்பதனை தான் உணர்ந்து
முத்தியடையும் முது நிலையும் எய்துவரே.


No comments:

Post a Comment